காணிப் பதிவு சட்டத்தை மறுசீரமைப்பு செய்யுமாறு கூறுகிறது உலக வங்கி!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2017/09/653815512IMF-logo-L.jpg)
இலங்கை தமது காணிப் பதிவு சட்டத்தை மறுசீரமைப்பு செய்ய வேண்டும் என்று உலக வங்கி அறிவுறுத்தியுள்ளது.
தற்போது இலங்கை அரசாங்கம், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் ஊடாக தகவல்களை பொதுமக்களுக்கு வெளிப்படுத்தி, சிறந்த முன்னேற்றத்தை வெளிப்படுத்துகிறது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல்களை வழங்குவதற்காக 30 ஆயிரம் அதிகாரிகள் வரையில் இதுவரையில் இணைக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் காணிகளின் உறுதிகள் உள்ளிட்ட விபரங்களை பொதுமக்கள் இலகுவாக அறிவதற்கு ஏதுவாக, அந்த சட்டத்திலும் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று உலக வங்கிக்கோரியுள்ளது.உலக வங்கியின் இலங்கைக்கான தேசப்பணிப்பாளர் ஸ்வராய் – ரிடியோ தமது வலைப்பதிவு ஒன்றில் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
Related posts:
சொந்த வீடு இல்லாத மக்களுக்கு வீடுகள்!
எரிபொருள் பௌசர்கள் மற்றும் ரயில்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது - அமைச்சர் கஞ்சன விஜேசேக...
நீர் கட்டணப் பட்டியல் அச்சிடுவது நிறுத்தம் – நடைமுறைக்கு வருகிறது இ-பில் அல்லது குறுஞ்செய்தி - நீர் ...
|
|