ஓரிரு நாளில் மரக்கறிகளின் விலைகள் குறையும்!

Friday, July 20th, 2018

தற்போது உயர்வாகக் காணப்படும் மரக்கறிகளின் விலை அடுத்த ஓரிரு நாள்களில் குறைவடையும் என்று ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு வருடமும் இக்காலப் பகுதியில் மரக்கறி வகைகளின் விலை அதிகரிப்பதுண்டு. தற்போது சந்தைக்கு பயிரிடப்பட்ட அதிகமான மரக்கறிகள் அறுவடை செய்து பெறப்படுவதனால் மரக்கறிகளின் விலை குறைவடையும்.

காலநிலை மாற்றம் காரணமாக சில மாதங்களாக மரக்கறி வகைகளின் விலை அதிகரித்தன.

40 ரூபா வரி அறவிடுவதனால் இறக்குமதி செய்யப்பட்ட கிழங்கு மற்றும் பெரிய வெங்காயத்தின் விலை ஓரளவு அதிகரித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் கிழங்கு மற்றும் பெரிய வெங்காயம் அதிகளவில் அறுவடை செய்யப்படுவதனால் அடுத்த மாதம் முதல் விலை குறைவடையும். இதேவேளை முட்டையின் விலை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

சிறுவர் மருத்துவமனை அமைக்க நெதர்லாந்து நிறுவனம் உதவி கோரி பேச்சுக்கள்  - யாழ்.போதனாவின் பணிப்பாளர்!
அரச வெசாக் விழா இம்முறை நயினாதீவில் - பிற மதங்களுடன் இணைந்து அரச வெசாக் விழாவை கொண்டாட ஏற்பாடு செய...
பொருளாதாரத்தை பலப்படுத்தும் தீர்மானங்களை எடுக்கும்போது குறைந்த வருமானம் பெறும் மக்களை அரசாங்கம் புறக...

யாழ்ப்பாணத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களின் பீ.சி.ஆர்.பரிசோதனை முடிவுகள் இன்று மாலை வெளியாகும் -...
மனிலாவில் இருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு நேரடி விமான சேவைகளை மீள ஆரம்பிப்பது தொடர்ப...
நாடாளுமன்ற தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவுடன் கட்சி செயலாளர்கள் நாளை சந்திப்பு!