எல்லைதாண்டிய இந்திய மீனவர்கள் நால்வர் கைது!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2017/11/arresr-1.jpg)
அத்துமீறி இலங்கை கடற்பரப்பிற்குள் மீன்பிடியில் ஈடுபட்ட 4 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.
இன்று(07) அதிகாலை குறித்த 4 இந்திய மீனவர்களும் கைது செய்யப்பட்டதாக கடற்படை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
இந்திய மீனவர்களிடமிருந்து மீன்பிடி உபகரணங்கள் சிலவும் மற்றும் அவர்கள் பயணித்த படகும் கடற்படையால் கைப்பற்றப்பட்டுள்ளன. நெடுந்தீவு கடற்பரப்பில் மீன் பிடித்து கொண்டிருந்த கோட்டைப்பட்டிணத்தைச் சேர்ந்த 4 மீனவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
Related posts:
இலங்கைப் பொலிஸ் சேவை மறுசீரமைப்பு செய்யப்படும் - அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார!
நாட்டுக்கு அவசியமான ஒளடதங்கள் தொடர்பான அறிக்கையை வழங்குமாறு சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு, சுகாதார அம...
கார் விபத்து - சிறுமி பரிதாபமாக உயிரிழப்பு!
|
|