எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் பெற்றோலிய கூட்டுத்தாபனம் இதுவரை தீர்மானிக்கவில்லை – வலுசக்தி அமைச்சு தெரிவிப்பு!

Saturday, February 26th, 2022

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன எரிபொருள் விலைகளை அதிகரிப்பது தொடர்பில் இன்னும் தீர்மானம் எடுக்கப்படவில்லை என வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது

இதேவேளை, லங்கா ஐ.ஓ.சி தமது எரிபொருள் விலையை நேற்று நள்ளிரவுமுதல் அமுலாகும் வகையில் மீண்டும் அதிகரித்துள்ளது.

இதனடிப்படையில் லங்கா ஐ.ஓ.சி.யின் அனைத்து வகையான டீசலும் லீற்றருக்கு 15 ரூபா வீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஐ.ஓ.சியின் ஒரு லீற்றர் ஒட்டோ டீசலின் புதிய விலை 139 ரூபாவாக அதிகரித்துள்ளது.

அத்துடன் பெற்றோல் விலை லீற்றருக்கு 20 ரூபா வீதம் அதிகரித்துள்ளது இதற்கமைய ஐ.ஓ.சியில் ஒக்டைன் 92 ரக பெற்றோல் ஒரு லீற்றரின் புதிய விலை 204 ரூபாவாக உயர்ந்துள்ளது.

இதனிடையே லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் கடந்த 6 ஆம் திகதியும் எரிபொருள் விலையை அதிகரித்திருந்தது.

எனினும் இலங்கை கனிய கூட்டுதாபனத்தின் எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் இதுவரையில் இறுதி தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை என வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


உலகெங்கம் இன்று சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டங்கள் - ஈ.பி.டி.பி இணையத்தளமும் வாழ்த்துகிறது!
அனலைதீவில் தனது வீட்டில் தங்கியிருந்த வயோதிபரை திட்டமிட்டு கொலை செய்ய முயற்சி - முதன்மை சந்தேக நபர் ...
வெளிநாட்டுப் பயணங்களைத் தவிர்க்குமாறு அமைச்சர்கள் மற்றும் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி ரணி...