ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 16 ஆயிரத்து 488 பேர் மீது வழக்கு – பொலிஸ் ஊடக பிரிவு!

Tuesday, May 19th, 2020

ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் நேற்றையதினம் மட்டும் 730 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன், குறித்த காலப்பகுதியில் 252 வாகனங்களும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும்  பொலிஸ் ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதிமுதல் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த சுகாதார தரப்பினரது ஆலோசனையின் பிரகாரம் நாடுமுழுவதும் நிடைமுறைப்படுத்தப்பட்டுவரும் ஊரடங்கு சட்ட காலத்தில் 59 ஆயிரத்து 765 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 16 ஆயிரத்து 668 வாகனங்களும் இதுவரை பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

மேலும், கைது செய்யப்பட்டவர்களில் 16 ஆயிரத்து 488 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதோடு, 6,000 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடக பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

Related posts:

தொற்று உக்கிர நிலையை அடைந்தபின் நோயாளர்கள் மருத்துவமனைகளுக்கு வருவதே உயிரிழப்புகள் அதிகரிக்க காரணம் ...
நிலவும் மிக வரண்ட காலநிலை - தோல் நோய்கள் அதிகரித்து வருவதாக சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்திய நிபு...
இஸ்ரேல் – இலங்கை இடையில் நேரடி விமான சேவை – பலாலி விமான நிலையத்தின் ஊடாக இந்தியாவுக்கு மற்றுமொரு தின...

புத்தர் சிலை சேதப்படுத்திய விசாரணையை முறையாக மேற்கொண்டிருந்தால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பேரழிவை தட...
வாகனங்கள் தவிர்ந்த ஏனைய இறக்குமதித் தடைகள் அடுத்த மாதத்திற்குள் நீக்கப்படும் - பதில் நிதியமைச்சர் ஷெ...
வீதி விபத்துக்களினால் ஏற்படும் மொத்த பொருளாதார சேதம் நாட்டின் மொத்த தேசிய உற்பத்தியில் 5 வீதமாக உள்ள...