ஊதியம் உயர்த்தாவிட்டால் முறையிடுங்கள்!

Tuesday, July 19th, 2016

நாட்டிலுள்ள தனியார் துறையினருக்கு வரவு செலவு திட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்ட 2500 ரூபா வேதன உயர்வு சரியாக வழங்கப்படுகின்றதா என்பதனை ஆராய்வதற்கு விசேட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

தொழில் திணைக்களத்தின் சட்ட ஆலோசகர் பி.எஸ்.பத்திரன தலைமையில் ஆறு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. தொழில் மற்றும் தொழிற்சங்க அமைச்சினால் குறித்த குழு அமைக்கப்பட்டுள்ளது.

குறித்த 2500 ரூபா வேதன உயர்வு கிடைக்கபெறாத தனியார் துறையினர் இக் குழுவிடம் தமது முறைப்பாடுகளை தெரிவிக்க முடியும். இதுவரையில் குறித்த குழுவிற்கு 200 இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts:


ஏழை மக்களது வாழ்வியல் விடியலுக்காக உழைத்து வருபவர் டக்ளஸ் தேவானந்தா அவர்களே - ஈ.பி.டி.பியின் யாழ்ப்ப...
ஈ.பி.டி.பி நிதி ஒதுக்கீடு : வடமராட்சி கிழக்கு கேவில் வெள்ளிநிலா மைதானப் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்!
சென்னையிலிருந்து காங்கேசந்துறைக்கு உல்லாசக் கப்பலில் வரும் சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகள் ஏற்படுத்த...