உள்ளூராட்சி தேர்தல் சட்டமூலம் 24 இல் திருத்தத்துடன் சமர்ப்பிப்பு – அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல!

உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான சட்டமூலம் எதிர்வரும் 24 ஆம் திகதி திருத்தத்துடன் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படுமென உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
அனைத்து சிவில் அமைப்புக்கள் மற்றும் பெண்கள் அமைப்புக்களிடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட கருத்துகளுக்கமைய அச்சட்டமூலத்தில் திருத்தங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இச்சட்டமூலம் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபாவினால் எதிர்வரும் 24 ஆம் திகதி வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படுமென்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து இச்சட்டமூலம்ளுநாடாமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படுமென்றும் அவர் குறிப்பிட்டார்.
Related posts:
பேஸ்புக் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரிப்பு- தகவல் தொழில்நுட்பப் பொறியியலாளர் ரொஷான் சந்திரகுப்த!
பல்கலைக்கழக மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான அனுமதி கைநூல் இன்று
பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்திற்கு நடந்தது என்ன? - இயக்குனர் நாயகம் அதிரடி!
|
|