உலகின் மிகப் பெரிய எண்ணெய் ஆராய்ச்சிக் கப்பல்கள் இரண்டு ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில்!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2021/04/13.jpg)
உலகின் மிகப் பெரிய இரண்டு எண்ணெய் ஆராய்ச்சிக் கப்பல்கள் ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தினை வந்தடைந்துள்ளன.
இதனால் உள்நாட்டு துறைமுக சேவைகளை வழங்கும் நிறுவனங்களுக்கு சேவைகளை வழங்குவதற்காக பல்வேறு சந்தர்ப்பங்கள் கிடைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது..
பனாமா நாட்டின் கொடியுடன் பயணத்தினை மேற்கொள்ளும் வெஸ்ட் கரினா மற்றும் வெஸ்ட் பொலாரிஸ் ஆகிய இரண்டு எண்ணெய் ஆராய்ச்சிக் கப்பல்களுமே ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தினை வந்தடைந்துள்ளது.
நீண்டகாலத்திற்கு உபகரணங்களை திருத்துதல், திருத்தசேவைகளுக்காக ஒன்றரை வருடகாலத்திற்கு ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தில் நங்கூரமிட்டு இந்த இரண்டு கப்பல்களும் சேவைகளை பெற்றுக்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
00
Related posts:
உயர்தர பரீட்சை முறைகேடுகளை விசாரணை செய்ய விசேட குழு!
இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட - இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கருடன் ச...
வைத்தியர்கள் தாதியர்கள் மற்றும் மருத்துவ வல்லுநர்களைத் தவிர வைத்தியசாலை அமைப்பை சிதைக்கும் திறன் எவர...
|
|