உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அறிக்கை ஜானதிபதியிடம் கையளிப்பு!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2021/04/download-5-6.jpg)
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் சட்டத்துறை பணிப்பாளர் ஹரிகுப்த ரோஹணதீர தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கையின் பரிந்துரைகளை ஆராய்வதற்காக நியமிக்கப் பட்ட அமைச்சரவை உப குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக் கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 15 ஆம் திகதி குறித்த அறிக்கை ஜனாதிபதியிடம் ஒப் படைக்கப்படவிருந்த நிலையில், மேலதிக பரிசீலனைக்காக அமைச் சரவை குழு இரண்டு வார கால அவகாசத்தினை பெற்றிருந்தது.
இதற்கமைய குறித்த அறிக்கை நேற்று மாலை ஜனாதிபதியிடம் கைய ளிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் சட்டத்துறை பணிப்பாளர் ஹரி குப்த ரோஹணதீர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலங்கையுடன் இராணுவ ஒத்துழைப்பை விரிவுபடுத்த விரும்பும் ரஷ்யா!
கொரோனா தொற்றில் இருந்து மேலும் 11 ஆயிரத்து 605 பேர் குணமடைவு - சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவ...
இலங்கைக்காக, சர்வதேச நாணய நிதியத்தில் அமெரிக்கா ஏன் தீர்க்கமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை – இலங்கைக்க...
|
|