ஈ.பி.டி.பியின் முயற்சியால் துணவி – சங்கானை சேச் வீதி புனரமைப்பு!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2018/08/38635080_220782361941043_100066454459645952_n.jpg)
50 ஆண்டுகளுக்கு மேலாக புனரமைக்கப்படாது மக்களுக்கு பெரும் அசௌகரியங்களை ஏற்படுத்தி வந்த துணவி – சங்கானை சேச் வீதிக்கு செல்லும் வீதி ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முயற்சியால் புனரமைப்பு செய்யப்படுகின்றது.
வலிகாமம் மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட குறித்த துணவி – சங்கானை சேச் வீதியை புனரமைத்து தருமாறு குறித்த பகுதி மக்கள் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்
இந்நிலையில் மக்களின் தேவைப்பாடுகளின் அவசியத்தை கருத்தில் கொண்டு; கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளரும் வலிகாமம் மேற்கு பிரதேச சபை உறுப்பினருமான சிவகுரு பாலகிருஷ்ணனின் முயற்சியால் முன்னுரிமைப்படுத்தப்பட்டு குறித்த வீதி வலிகாமம் மேற்கு பிரதேச சபையால் புனரமைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இணைய பண பரிமாற்ற மோசடி தொடர்பில் அவதானம்!
நாடு தொடர்பிலான கரிசனையுடன் ஒட்டுமொத்த மக்களும் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த ஒத்துழைப்பு வழங்க ...
எந்தவொரு அத்தியாவசிய பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்படாது - பொருட்களின் விலையினை உயர்த்த முற்பட்டால்...
|
|