இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் வெட்கப்பட வேண்டும் – ரோஷன் மஹானாமா!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2018/09/download-2-5.jpg)
இலங்கை கிரிக்கெட்டின் தற்போதைய நிலை குறித்து அதன் நிர்வாகம் வெட்கப்பட வேண்டும் என ரோஷன் மஹானாமா கூறியுள்ளார்.
ஆசிய கிண்ண தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில் அதில் பங்கேற்ற இலங்கை அணி வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுடன் படுதோல்வி அடைந்து தொடரிலிருந்து தொடக்கத்திலேயே வெளியேறியது.
இதனால் இலங்கை அணி மீது விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து பேசிய இலங்கை அணியின் முன்னாள் வீரர் மஹானாமா, இலங்கை கிரிக்கெட்டின் தற்போதைய நிலை குறித்து நிர்வாகம் வெட்கப்பட வேண்டும்.
கிரிக்கெட் ஆட்டங்களை பார்க்க நான் அதிக நேரம் செலவழிப்பதில்லை.
இலங்கை அணி தோல்வியால் தவிப்பதை தாங்க முடியவில்லை, என்ன நடக்கிறது என்பதை நிர்வாகிகள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்
Related posts:
20 ஆயிரம் பட்டதாரிகளுக்கு ஜீன் மாதம் அரச நியமனம் - தேசிய கொள்கை பொருளாதார விவகார அமைச்சின் மேலதிக ...
யாழ் மத்திய கல்லூரிக்கு கல்லூரியின் பேருந்து குழுமத்தால் அதிநவீன வசதிகளுடன் கூடிய பேருந்து வழங்கிவைப...
மலையகப் பகுதியில் கேட்கும் மர்ம ஒலி - பாதகமான நிலைமை ஏற்படலாம் என பேராசிரியர் அதுல சேனாரத்ன எச்சரிக்...
|
|