இலங்கைக்கு மேலுமொரு தொகை சினோபார்ம் தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டன!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2021/08/image_fb46f8bdce-600x338-1.jpg)
இலங்கைக்கு மேலுமொரு தொகை சினோபார்ம் தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டுள்ளன. அதற்கமைய, மேலும் ஒரு மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் இன்று செவ்வாய்க்கிழமை காலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
இதேவேளை, மேலும் இரண்டு மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் இந்த மாத இறுதிக்குள் இலங்கைக்கு கொண்டுவர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சீன தூதரகம் தெரிவித்துள்ளது.
அதேநேரம், இலங்கைக்கு இதுவரையில் 13.98 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக சீன தூதரகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
வேலையற்ற பட்டதாரிகளின் 5 ஆம் நாள் போராட்டத்திலும் ஈ.பி.டி.பி. பங்கேற்பு!
நாளை முதல் வானிலையில் மாற்றம்!
ஊரடங்குச் சட்டம் அமுலில்: முகத்தை மறைத்து வீட்டுக்குள் புகுந்த யாழ்ப்பாணத்தில் கொள்ளை!
|
|