இலங்கைக்குத் தேவையான ஒத்துழைப்புகளை வழங்கத் தயார் – அமெரிக்க அரசதலைவர் ஜோ பைடன் அறிவித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2022/06/1655315256-rn-2.jpg)
இலங்கைக்குத் தேவையான ஒத்துழைப்புகளை வழங்குவேன் என, அமெரிக்க அரசதலைவர் ஜோ பைடன் (Joe Biden) அறிவித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
வோஷிங்டனில் தூதுவர்களை சந்தித்தபோது, இலங்கைக்கான தூதுவர் மஹிந்த சமரசிங்கவை சந்தித்த ஜோ பைடன் (Joe Biden) , மேற்கண்டவாறு கூறியதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் இலங்கைக்கு உதவுவதற்கு அமெரிக்கா முன்வந்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாக பிரதமர் ரணில் கூறினார்.
இதற்காக அமெரிக்கஅரச தலைவர் ஜோ பைடனுக்கு (Joe Biden) தனது நன்றியையும் இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
தெரிவுக்குழு முன்னிலையில் பொய்யான தகவல்களை வழங்கினால் சட்ட நடவடிக்கை!
கொரோனா வைரஸ் தாண்டவம்: இலங்கையில் பதிவானது முதல் மரணம்!
ஊரடங்கை மீறிய குற்றத்தில் இதுவரை 66 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கைது - 8 ஆயிரத்து 671 பேருக்கு தண்டனை...
|
|