இரணைமடு குளத்தின் 4 வான்கதவுகள் திறப்பு!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2021/11/download-7-8.jpg)
இரணைமடு குளத்தின் நான்கு வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
அதிக மழைவீழ்ச்சி காரணமாக இரணைமடு குளத்தின் நீர்மட்டம் அதிகரித்துள்ளமையினால் இன்று (28) அதிகாலை 6 மணிக்கு இந்த வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இரண்டு வான்கதவுகள் 6 அங்குலத்துக்கும், இரண்டு வான்கதவுகள் 12 அங்குலத்துக்கும் திறக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
பொலிஸாருக்கு அதிகாரம் இல்லை!
இலங்கை மத்திய வங்கி முறி விற்பனையால் அரசாங்கத்துக்கு நட்டம் இல்லை!- உலக வங்கி!
தொழில்நுட்பப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கே உள்ளுராட்சி மன்ற தேர்தல் சீர்திருத்த சட்டமூலம் - அமைச்சர் ...
|
|