இணையவழி கற்பித்தலுக்கான செலவுகளை ஈடுசெய்யவே 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு – கல்வி அமைச்சர் தெரிவிப்பு!

இணையவழி கற்பித்தலுக்கான செலவுகளை ஈடுசெய்யும் நோக்கிலேயே, ஆசிரியர், அதிபர்களுக்கு இரண்டு மாதங்களுக்கு ஐயாயிரம் ரூபா கொடுப்பனவை வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் –
ஒன்றரை ஆண்டுகளாக அரசாங்கம் அவர்களுக்கான வேதனத்தை உரியவாறு வழங்கி வருகிறது.
இந்த நிலையில், தற்போது ஆசிரியர், அதிபர்களுக்கு இணையவழி கற்பித்தல் நடவடிக்கைகளுக்காக ஏற்பட்டுள்ள மேலதிக செலவுகளுக்காகவே, இரண்டு மாதங்களுக்கு தலா 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவை வழங்க அமைச்சரவை அனுமதியளித்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
வாழ்வின் எழுச்சி சமுதாய வங்கிகள் சித்திரைப் புத்தாண்டைக் கொண்டாடுவதற்கு ஏற்பாடு!
சட்டவிரோதமாக இலண்டனுக்கு அனுப்ப உதவிய பிரித்தானிய யுவதி கைது!
அரியாலை படுகொலை: உண்மைகள் அம்பலம்!
|
|