அரச வங்கிகளில் மட்டுப்படுத்தப்பட்ட சேவைகள் இன்று ஆரம்பம்!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2021/05/bank-22.jpg)
நாட்டிலுள்ள அரச வங்கிகள், தங்களது மட்டுப்படுத்தப்பட்ட சேவைகளை இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பித்துள்ளன.
இதற்கமைய இன்று இலங்கை வங்கி, மக்கள் வங்கி உள்ளிட்ட அரச வங்கிகள், 11 மணி வரை மட்டுப்படுத்தப்பட்ட சேவைகளை முன்னெடுத்திருந்தன.
மேலும் குறித்த சேவையை, திங்கள் முதல் பகல் 1 மணி வரை முன்னெடுப்பதற்கு ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை நிதிகளை கையாளும் அரச திணைக்களங்கள் சில, மாத இறுதி பணிகளை முன்னெடுப்பதற்காக இன்று திறக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
போட்சிட்டி திட்டத்தை முன்னெடுக்க இணக்கம்!
மொபைல் மர ஆலைகளுக்கு விரைவில் தடை!
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டு - இந்திய மீனவர்கள் 19 பேர...
|
|