அமரர் கணேஸ் ஐயாவின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்தர்கள் அஞ்சலி மரியாதை!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2021/05/aa99ccfe-93e2-4c78-a9d0-9241247bf07e.jpg)
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நீண்டகால உறுப்பினரான கணேஸ் ஐயாவின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் சிவகுர பாலகிருஸ்ணன் தலைமையிலான முக்கியஸ்தர்கள் மலர்வளையம் சாத்தி இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார்.
காரைநகரை வேதரடைப்பு, பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் கணேசன் என்னும் இயற்பெயருடைய கணேசையா இன்று அதிகாலை உடல் நலக்குறைவு காரணமாக தனது 70 ஆவது வயதில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் காலமானார்.
இந்நிலையில் அன்னாரின் பூதவுடல் அஞ்சலிக்காக வேதரடைப்பு, காரைநகரிலுள்ள அன்னாரின் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்றையதினம் அங்கு சென்ற கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக பொறுப்பாளர்கள் பிரதேசங்களின் நிர்வாக பொறுப்பாளர்கள், கட்சியின் முக்கியஸ்தர்கள் அமரரின் பூதவுடலுக்கு மலர்வளையம் சாத்தி தமது இறுதி அஞ்சலி மரியாதையை செலுத்தியிருந்தனர்.
அத்துடன் அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் உற்றார் உறவினர்களுக்கும் ஆறுதலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|