அத்துமீறி பிரவேசித்த இந்திய மீனவர்களில் 20 பேர் விளக்கமறியலில்!

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி பிரவேசித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 21 இந்திய மீனவர்களில் 20 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட 21 இந்திய மீனவர்களை நேற்றிரவு ஏழு மணியளவில் மன்னார் நீதவான் ஆசீர்வாதம் கிறேசியன் அலெக்ஸ்ராஐா முன்னிலையில் ஆஜர்படுத்திய போது அவர்களில் 20 பேரை எதிர்வரும் மே மாதம் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களில் 16 வயது சிறுவனொருவன் காணப்பட்டதாகவும், அந்த சிறுவனை சிறுவர் பராமரிப்பு நிலையில் வைக்குமாறும் நீதவான் உத்தரவு பிறப்பித்ததாக கடற்றொழில் திணைக்களத்தின் மன்னார் மாவட்ட உதவிப் பணிப்பாளர் பீ.எஸ் மிரண்டா குறிப்பிட்டுள்ளார்.
தலைமன்னாருக்கு தெற்கு கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டபோது இந்திய மீனவர்கள் 21 பேரும் நேற்று நண்பகல் கைது செய்யப்பட்டதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கெப்டன் அக்ரம் அலவி குறிப்பிட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்களின் மூன்று படகுகளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
Related posts:
இரண்டு பிரான்ஸ் கப்பல்கள் இலங்கையில்!
அனைத்து பல்கலைகழகங்களும் மீள திறக்கப்படுகிறது - மானியங்கள் ஆணைக்குழு!
தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்டத்தின் முதல் தவணை இம்மாதம் முதல் வாரத்திற்குள் வழங்க நடவடி...
|
|