அதிபர்கள், ஆசிரியர்கள் தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயார்!

அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் எதிர்வரும் மே மாதம் 09 மற்றும் 10ஆம் திகதிகளில் சுகயீன விடுமுறையில் தொழிற்சங்க நடவடிக்கை ஒன்றினை முன்னெடுக்க தீர்மானித்துள்ளனர்.
சம்பள பிரச்சினைகள் உட்பட சில கோரிக்கைகளை முன்வைத்தே குறித்த தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கபடுகின்றன.
கடந்த மார்ச் 13 ஆம் திகதி இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் மற்றும் அதிபர் சேவை சங்கத்தினர் சுகயீன விடுமுறையில் தொழிற்சங்க நடவடிக்கை ஒன்றினை முன்னெடுத்திருந்த போதிலும் இதுவரை அரசு சாதகமான தீர்வொன்றினை வழங்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
சுதந்திர கட்சியின் விஷேட மாநாடு டிசம்பரில்!
இலங்கைப் பிரதிநிதிகள் - எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் காப்புறுதி உரிமையாளர்கள் இடையிலான பேச்சுவார்த்தை ...
கிராமியப் பகுதிகளில் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுள்ள மக்களுக்குசந்தை வாய்ப்புகளைப் பெற்றுக் கொடுக்கவும...
|
|