2800 குடும்பங்களுக்கு மீள்குடியேற தடை!

Wednesday, May 25th, 2016

நாட்டில் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பத்து மாவட்டங்களில் வசித்த 2800 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் மீண்டும் அவர்களது பழைய இருப்பிடங்களில் வசிக்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மக்களுக்கு அங்கு வசிப்பதற்கான தடையினை தேசிய கட்டிட ஆய்வுநிலையத்தின் நிலச்சரிவு ஆராய்ச்சி மற்றும் இடர் மேலாண்மை பணிப்பாளர்ஆர்.எம்.எஸ்.பண்டார தெரிவித்துள்ளார்.

இதில் கேகாலை மாவட்டத்தில் 1762 குடும்பங்களும், கண்டியில் 652, இரத்தினபுரி230, நுவரெலியாவில் 114, மாத்தளையில் 42, குருநாகலில் 31, காலி 15,  கொழும்பு  மற்றும் கம்பஹா ஆகிய இடங்களில் 15 குடும்பங்களும் இவ்வாறு தமது பழைய வாழ்விடங்களை  இழந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை பதுளை, ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் 661 இடங்களில் மண்சரிவு தொடர்பான ஆய்வு செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts:

எதிர்வரும் 19 ஆம் திகதிமுதல் இரண்டாவது தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை ஆரம்பம் - நோயியல் பிரிவின் பணிப...
3 ஆயிரத்தை நெருங்கியது சமையல் எரிவாயுவின் புதிய விலைகள் – கோதுமை மா, சிமெந்தின் விலைகளும் நள்ளிரவுமு...
எதிர்வரும் திங்களன்று ஐ.நா. அமர்வு அரம்பம் - ஜி.எல்.பீரிஸ் தலைமையிலான குழு நாளைமறுதினம் ஜெனிவா பயணம...