யாழ். கரவெட்டி பிரதேச சபை முன் பெண் ஒருவர் நீதி கோரிப் போராட்டம்!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2021/04/00.jpg)
யாழ்ப்பாணம் நெல்லியடி சந்தைக்கு அண்மையில் பழக்கடை ஒன்று காணப்படுவதால் அது தமக்கு இடையூறாக உள்ளதாக தெரிவித்து பழக்கடையில் இருந்த பழங்களை பிரதேச சபையினர் எடுத்துச் சென்மையால் தான் பாதிக்கப்பட்டள்தாகவும் அதற்கு தனக்கு நீதி வேண்டும் என்று கோரி வியாபார நடவடிக்கையில் ஈடுபடும் பெண் தனது பிள்ளைகளுடன் சென்று கரவெட்டி பிரதேச சபை முன்பாக போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவமொன்று நடைபெற்றுள்ளது..
மிக நீண்டகாலமாக குறித்த பெண் பழக்கடை வியாபாரத்தில் ஈடுபட்டுவருவதாகவும் சந்தைக்கு அண்மையில் பழக்கடை இருப்பதால் அது சந்தை வியாபாரத்துக்கு இடையூறு எனத் தெரிவித்து பிரதேச சபை ஊழியர்கள் பழங்களை அள்ளிச் சென்றததாக குறித்த பெண் குற்றம்சாட்டியுள்ளார்.
இதனால் அவர்கள் அள்ளிச் சென்ற பழங்களுக்கான நட்ட ஈட்டை தமக்கு வழங்குமாறும் கோரியே எரிபொருள் போத்தல் ஒன்றுடன் அங்கு குறித்த பெண் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.
இந்லையில் சம்பவ இடத்திற்கு பொலிஸாரும் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|