மூன்று ரஷ்ய பிரஜைகள் விடுதலை!

Tuesday, March 7th, 2017

இலங்கையில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த ரஷ்ய பிரஜைகள் ஒன்பது பேரில் மூவர் இன்றைய தினம் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் எனவும் குறித்த ரஷ்ய பிரஜைகள் இன்று நாடு கடத்தப்படவுள்ளனர் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன

நாட்டின் குடிவரவு சட்டங்களை மீறியமையாலேயே இவர்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். இதேவேளை, கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள ரஷ்ய பிரஜைகளை விடுதலை செய்வது தொடர்பில் மாலைத்தீவு மற்றும் இலங்கையில் உள்ள ரஷ்ய கூட்டமைப்பு தூதரகம் முயற்சித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: