பெண் சட்டத்தரணி மீது மீண்டும் பிடியாணை!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2016/10/2aebb15d1e90453d9af2bff2d0d03145_L_5.jpg)
சட்டத்தரணி சர்மினி விக்னேஸ்வரனை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு மல்லாகம் நீதிமன்று நேற்று உத்தரவிட்டது. கடந்த மாதம் அவரைக் கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டபோதும், அவர் நீதிமன்றில் சரணடைந்தார். இந்த நிலையில் நேற்று மீண்டும் அதே வழக்கில் அவருக்குப் பிடியாணை பிறப்பித்தது மல்லாகம் நீதிவான் மன்றம்.
நீதிமன்ற பதிவாளரை அச்சுறுத்திய குற்றச்சாட்டு வழக்கு மல்லாகம் நீதிவான் மன்றில் இடம்பெற்று வருகிறது. அந்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது சட்டத்தரணி சர்மினி மன்றில் முன்னிலையாகவில்லை. அதனால் அவருக்குப் பிடியாணை பிறப்பித்தது நீதிமன்று. இந்த வழக்கை பொலிஸார் மல்லாகம் நீதிவான் மன்றில் தாக்கல் செய்யும் தினத்தன்று சட்டத்தரணி சர்மினி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைக்கப்பட்டார். அந்த தவணையில் அவர் முன்னிலையாகவில்லை. அதனால் அவரைக் கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு நீதிவான் மன்று பிடியாணை பிறப்பித்தது. அதனையடுத்துக் கடந்த தவணை அவர் நீதிமன்றில் பிரிதொரு சட்டத்தரணி ஊடாகச் சரணடைந்தார். அன்றைய விசாரணையின் பின்னர் சட்டத்தரணி சர்மினிக்கு எதிரான வழக்கு நேற்றைய தினத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது. நேற்று திறந்த மன்றில் வழக்குக்கு அழைத்தபோது, அவர் முன்னிலையாகவில்லை. அதனால் அவருக்கு மீண்டும் நேற்றுப் பிடியாணை பிறப்பித்தார் நீதிவான் ஏ.ஜீட்சன் அவரது அலைபேசியிலிருந்தே நீதிமன்ற பதிவாளருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டப்பட்டு தெல்லிப்பழை பொலிஸாரால் வழக்கு தொடரப்பட்டது.
Related posts:
|
|