பாண், பணிஸ் உணவுப்பொருட்களின் விலை அதிகரிப்பு!

Tuesday, September 18th, 2018

பாண், பனிஸ் உள்ளிட்ட அனைத்து உணவுப்பொருட்களின் விலைகளை 5 ரூபாயால் அதிகரிக்க, சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெதுப்பக பொருட்களின் தயாரிப்புக்காக பயன்படுத்தப்படும் ஃபாம் எண்ணெய் ஆகியவற்றிற்கு அரசாங்கத்தினால் விதிக்கப்பட்டுள்ள புதிய வரி காரணமாகவே, அவற்றின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கோதுமை மாவின் விலை அதிகரிப்பையடுத்து, கடந்த 03 ஆம் திகதி பாண் மற்றும் கொத்து ரொட்டியின் விலையை அதிகரிப்பதாக சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


மழை தொடர்ந்தால் வெள்ள அபாயம் - இரணைமடு கீழப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு மாவட்ட அனர்த்த முகாமைத்...
எதிர்வரும் 18 ஆம் திகதிமுதல் தொடருந்து போக்குவரத்தை வழமைக்கு கொண்டு வர முடியும் - தொடருந்து திணைக்கள...
அகற்றப்பட்டது காங்கேசன்துறை ஆயுதக் கிடங்கு - பாதுகாப்பு முகாமும் மூடல் - மக்களின் 30 ஏக்கர் நிலம் வி...