பாடசாலை மீது தென்னை மரம் முறிந்து வீழ்ந்ததில் ஆசிரியரும் மாணவர்களும் காயம்!

வெலிமடை பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் தென்னை மரமொன்று முறிந்து வீழ்ந்ததில் காயமடைந்த மாணவர்களும் ஆசிரியரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதன்போது காயமடைந்த 09 மாணவர்களும் ஆசிரியர் ஒருவரும் வெலிமடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.
பாடசாலை ஆய்வுகூடத்தின் மீது இன்று(15) முற்பகல் 9.45 மணியளவில் தென்னை மரம் முறிந்து வீழ்ந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
சம்பவம் தொடர்பில் வெலிமடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது..
Related posts:
அமைச்சர் விஜயதாஸ தொடர்பில் ஐ.தே.க. தீர்மானிக்கும் -அமைச்சர் சம்பிக்க
நாட்டை முடக்குவது மிகவும் இலகு: ஏற்படும் பாதிப்புக்கள் பாரதூரமானவை - அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவி...
முல்லைத்தீவில் இதுவரை 501 பேருக்கு கொரோனா தொற்று!
|
|