காணாமல்போனோர்கள் தொடர்பில் 13,200 விண்ணப்பங்கள்!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2018/03/images-2-13.jpg)
நாடளாவிய ரீதியிலிருந்து காணாமல்போனோர்கள் தொடர்பில் 13 ஆயிரத்து 200 விண்ணப்பங்கள் தமக்கு கிடைத்துள்ளதாக தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க அமைச்சின் செயலாளர் வி.சிவஞானசோதி தெரிவித்துள்ளார்.
குறித்த இந்த விண்ணப்பங்கள் காணாமல்போனோர் தொடர்பான பணியகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
காணாமல்போனோர் தொடர்பாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து வினவியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்
Related posts:
தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப இலவசப் பயிற்சிக்கு விண்ணப்பம் கோரல்!
எதிர்ப்புகள் சேதன பசளைக்கான முதலீடாக அமைந்துள்ளது - பூகோள எரிசக்தி ஒப்பந்தத்தில் இலங்கை இணை தலைமை வக...
ஒக்டோபர் 25 ஆம் திகதி நாடளாவிய ரீதியாக உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை - கல்வி இராஜாங்க அமை...
|
|