இடி தாக்குதலுக்கு இலக்காகி மீனவர் பலி!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2017/08/thumb_large_lighting.jpg)
யாழில். இடி தாக்குதலுக்கு இலக்காகி மீனவர் ஒருவர் இன்று செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ளார்.
யாழ்.குருநகர் கடற்கரை வீதியைச் சேர்ந்த பற்றிக் நிரஞ்சன் (வயது 28) என்ற மீனவரே உயிரிழந்துள்ளார்.
இடியுடன் கூடிய மழை பெய்துகொண்டிருந்த வேளையி;ல் நேற்று இரவு குருநகர் கடற்பரப்பில் மீன்பிடிக்க நண்பர்களுடன் சென்ற வேளையில், இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
இவருடன் கூடச் சென்றவர்களுக்கு எந்தவித காயங்களும் ஏற்படவில்லை. உயிரிழந்தவரின் சடலம் யாழ்.போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.
Related posts:
முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் காலமானார்!
நாடளாவிய ரீதியாக 19 ஆயிரத்து 641 சுற்றி வளைப்புக்கள்- 61 மில்லியன் ரூபா வருமானம் என மதுவரித் திணைக்...
அவுஸ்திரேலிய கிரிக்கெட் சுற்றுப் பயணம் குறித்த அறிக்கை கணக்காய்வாளர் நாயகத்துக்கு!
|
|