வாழ்விடங்களில் தொடர்ந்தும் வாழ்வதற்கு உதவுமாறு பண்டாரிக்குளம் மக்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை!

Sunday, December 19th, 2021

வவுனியா, பண்டாரிக்குளம் பிரதேசத்தில் கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக வாழ்ந்து வருகின்ற மக்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

குறித்த பிரதேசத்தில் உள்ள அரச காணியில் முப்பதிற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்ற நிலையில், அங்கிருந்து வெளியேறுமாறு அரசாங்கத்தினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனவே, தமது வாழ்விடங்களில் தாம் தொடர்ந்தும் வாழ்வதற்கு உதவுமாறு பாதிக்கப்பட்ட மக்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை முன்வைத்தனர். மக்களின் கருத்துக்களைக் கேட்டறிந்து கொண்ட அமைச்சர், குறித்த விடயம் தொடர்பாக ஆராய்ந்து நியாயமான தீர்வினைப் பெற்றுத் தருவதாகத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:

முள்ளிவாய்க்காலில் புலிகளுக்கு நினைவு சதுக்கம் வேண்டாம் என்கிறது தினக்குரல் பத்திரிகை : இல்லை உயிரி...
யாழ்ப்பாணம் - சென்னை இடையிலான விமான போக்குவரத்து கட்டணங்களை குறைப்பது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவா...
ஈ.பி.டி.பி. கூறுகின்ற அரசியல் நிலைப்பாட்டையே ஏனைய கட்சிகளும் பின் தொடர்கின்றன - அமைச்சர் டக்ளஸ் தே...