வவுனியாவில் நடைபெற்ற சிறுவர் முதியோர் தின நிகழ்வில் டக்ளஸ் தேவானந்தா பங்கேற்பு!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2017/10/22554405_1557171727655242_1396174600_n.jpg)
வவுனியாவில் நடைபெற்ற உலக சிறுவர் முதியோர் தின நிகழ்வில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சிறப்பு அதிதியாக கலந்துகொண்டு சிறப்பித்துள்ளார்.
தரணிக்குளம் கணேசா வித்தியாலத்தில் விசேடமாக மண்டபத்தில் குறித்த நிகழ்வு இன்று காலை நடைபெற்றது.
வவுனியா தரணிக்குளம் கணேசா வித்தியாலயத்தில் நடைபெற்ற வவுனியா மாவட்ட சிறுவர் முதியோர் கௌரவிப்பு நிகழ்வில் சிறப்டபு அதிதிகளில் ஒருவாராக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவும் சிறப்பு அதிதியாக கலந்துகொண்டு சிறப்பித்திருந்தார்.
வவுனியா மாவட்டத்தில் தரணிக்களம் மறவன்குளம், சுந்தரபுரம் ஆகிய குடியிருப்புகளை நிறுவி மக்களை மீளக் குடியேற்றி அவர்களுக்கான அடிப்படைத்தேவைகளை பெற்றுக்கொடுத்தவர் டக்ளஸ் தேவானந்தா. இதேபோன்று இன மத மொழி பேதங்களுக்கு அப்பால் வடக்கின் பல பாகங்களிலும் புத்தளம் உள்ளிட்ட வெளி மாவட்டங்களிலும் பல குடியிருப்புகளை நிறுவி மக்களை மீளக்குடியேற்றியிருந்தவர் டக்ளஸ் தேவானந்தா என்பது குறிப்பிடத்தக்கது.
இதன்போது கட்சியின் வவுனியா மாவட்ட நிர்வாக செயலாளர் திலீபன், கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஷ்ணன், ஆகியோர் உடனிருந்தனர்
Related posts:
|
|