நெடுந்தீவில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவுக்கு மகத்தான வரவேற்பு!

Friday, February 2nd, 2018

நெடுந்தீவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவுக்கு அங்குள்ள மக்கள் மாலை அணிவித்து மகத்தான வரவேற்பளித்துள்ளனர்.

நெடுந்தீவுக்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டு இன்றைய தினம் குறிகாட்டுவானிலிருந்து புறப்பட்டு நெடுந்தீவு இறங்குதுறையைச் சென்றடைந்த டக்ளஸ் தேவானந்தாவை அங்கு வீதியின் இருமருங்கிலும் திரண்டிருந்த மக்கள் மாலை அணிவித்து மங்கல வாத்தியம் சகிதம் மகத்தான வரவேற்பளித்து அழைத்துச் சென்றனர்.

அத்துடன் செல்லும் வழி நெடுகிலும் மக்கள் மலர் மாலைகளை அணிவித்தும் மலர்களைத் தூவியும் பட்டாசுகளைக் கொளுத்தியும் “எங்கள் தலைவர் டக்ளஸ் தேவானந்தாவே” என்று உரத்துக் குரலெழுப்பி அன்புடன் வரவேற்றனர்.

அத்துடன் பிரதான கூட்டம் நடைபெறும் மண்டபம் பச்சை சிவப்பு மஞ்சள் நிறக் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இன்றும் நாளையும் நெடுந்தீவில் தங்கியிருப்பதுடன் அங்கு பல பகுதிகளுக்கும் சென்று தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுவதுடன் மக்களது தேவைப்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்தறியவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

27707811_1663132223725858_1618835333_o

27650732_1663132210392526_70365961_o

27606345_1663132377059176_302931375_o
27651075_1663132463725834_1984440538_o - Copy

27653867_1663132360392511_1802299109_o - Copy

27707365_1663132423725838_1763503014_o - Copy

27650970_1663132323725848_340772301_o

27707652_1662519880453759_1954139318_o

27651075_1663132463725834_1984440538_o

Related posts:

தவறுகளிலிருந்து கற்றுக் கொண்டு எதிர்காலத்தை நோக்கி முன்னேறுவோம் – மேதின செய்தியில் செயலாளர் நாயகம் ட...
குடாநாட்டிற்கான குடிநீர்வழங்கும் பாரிய திட்டம் அமைச்சர்களான சமல் ராஜபக்ஷ மற்றும் டக்ளஸ் தேவானந்தா ம...
வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு யாழ் மாவட்டத்தில் 5 ஆயிரம் ரூபாய் வழங்குவதற்கு சகல ஏற்பாடுகளும் செ...