ஜனநாயக மக்கள் காங்கிரஸ் கட்சியின் வன்னி மாவட்ட காரியாலய திறப்பு விழாவில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கலந்து சிறப்பிப்பு!

Sunday, June 17th, 2018

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் கட்சியின் வன்னி மாவட்ட காரியாலய திறப்பு விழாவில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா கலந்து சிறப்பித்துள்ளார்.

வவுனியா வெளிக்குளம் பகுதியில் குறித்த அலுவலகம் இன்றையதினம் (17) சம்பிரதாயபூர்வமாக திறந்தவைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் முன்னாள் அமைச்சர் டிலான் பெரேரா, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அமைப்பின் தேசிய அமைப்பாளர் இராஜதுரை, முன்னாள் பிரதி அமைச்சரும் ஜனாதிபதி விஷேட அமைப்பாளருமான  பிரபாகணேசன், மாகாண சபை உறுப்பினர்கள் பிரதேச சபை உறுப்பினர்கள் என ஏராளமான அரசியல் பிரமுகர்களும் பொது மக்களும் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

வனஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு திணைக்களங்களினால் முடக்கப்பட்டுள்ள பயிர்செய்கை நிலங்ககளை விடுவி...
நெடுந்தீவு மக்களின் எதிர்பார்ப்புகள் விரைவில் நிறைவேற்றப்படும் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!
கரைச்சி பூநகரி பிரதேச சபைகளில் ஏற்பட்ட ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர் வெற்றிடங்களுக்கு புத...

தனியார்துறை ஊதிய உயர்வு வெறும் எழுத்து மூல ஆவணம்தானா? நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா
காலஞ்சென்ற ஞானசார தேரரின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா...
யுத்தத்தால் இந்தியா சென்று மீளவும் இலங்கை திரும்பும் அகதிகளின் வாழ்வியல் நிலை தொடர்பில் ஏதேனும் ஏற்ப...