கிளிநொச்சி மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு உணவுப்பொதிகள் வழங்க ஏற்பாடு – கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Thursday, November 5th, 2020

கிளிநொச்சி மாவட்டத்தில் கொரோ தொற்றுச் சந்தேகம் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் றிவுறுத்தலுக்குமைய 10,000 ரூபா பெறுமதியான உணவுப்பொதிகள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவரும், கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் குறித்த மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் ஒருங்கிணைப்புக்குழு தலைவரின் இணைப்பாளரும், முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினருமான வை.தவநாதன் விடுத்த அவசர வேண்டுகோளுக்கமைய, மாவட்டச் செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன் இதற்கான நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொண்டு வருகிறார்.

முன்னதாக, கடந்த 3 ஆம் திகதி பிற்பகல் 2 மணிக்கு நடைபெற்ற கொரோணா பாதுகாப்புச் செயலணிக் கூட்டத்தில், மேலதிக அரசாங்க அதிபர் சிறிமோகனன், பிரதமர் அலுவலகத்தினால் இதுதொடர்பான சுற்றறிக்கை மாவட்டச் செயலகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்திருந்தார்.

இதன்பிரகாரம், இந்த 10,000 ரூபா பெறுமதியான உணவுப் பொதிகளை, இரண்டு பிரிவுகளாக தலா 5,000 ரூபா பெறுமதியான பொதிகளாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு வழங்குவதற்கான ஏற்பாடுகளை மாவட்டச் செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன் மேற்கொண்டு வருகிறார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் சுமார் 90 குடும்பங்களைச் சேர்ந்த 487 பேர் இவ்வாறு கொரோணா தொற்று அச்சம் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக பிரதி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சரவணபவன் நேற்றைய கூட்டத்தில் தகவல் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

ஈ.பி.டி.பியின் மகளிர் பேராளர் மாநாட்டில் ஈழ விடுதலைப் போராட்டத்தில் இன்னுயிர்களை ஈந்தவர்களுக்கு அஞ்ச...
யாழ் முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை சந்தித்து ஆதரவு தெரிவிப்பு!
புதிதாக உருவாக்க உத்தேசிக்கப்பட்டுள்ள அக்கராயன் பிரதேச செயலகப் பிரிவு தொடர்பாக விரைவில் அமைச்சரவைப் ...

சகல பட்டதாரிகளையும் பட்டதாரி ஆளணிக்குள் உள்வாங்கி பொருத்தமான பதவிப் பெயர்களில் நியமனங்கள் வழங்கப்பட ...
வடக்கு கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு - அமைச்சர் டக்ளஸின் முயற்சியில் இடம்பெற்ற...
மன்னாரின் கடற்றொழில் மற்றும் நீர்வேளாண்மை அபிவிருத்தியின் ஆரம்பமே ஓலைத்தொடுவாய் கடலட்டை நிலையத்தின் ...