350,000 இற்கும் அதிகமான வாக்காளர் அட்டைகள் இதுவரை உரியவர்களிடம் சென்றடையவில்லை – அஞ்சல் நிலையங்களில் தேங்கியுள்ளதாகப் பிரதி அஞ்சல் மா அதிபர் தெரிவிப்பு!

Wednesday, November 13th, 2024

பொதுத் தேர்தலுக்கான 350,000 ற்கும் அதிகமான வாக்காளர் அட்டைகள் தற்போது வரை அஞ்சல் நிலையங்களில் தேங்கியுள்ளதாகப் பிரதி அஞ்சல் மா அதிபர் ராஜித்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.

அஞ்சல் திணைக்களத்துக்கு வழங்கப்பட்ட வாக்காளர் அட்டைகளில் 98 சதவீதமானவை தற்போது வீடுகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன.

எனவே இதுவரை வாக்காளர் அட்டைகள் கிடைக்கப்பெறாத வாக்காளர்கள் இன்றைய தினமும் அஞ்சல் நிலையத்துக்கு சென்று அவற்றைப் பெற்றுக்கொள்ள முடியும் என பிரதி அஞ்சல் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்.

000

Related posts: