வேலணை பிரதேச சபை நடவடிக்கை – தேசிய சுற்றுச்சூழல் வாரத்தை முன்னிட்டு சிரமதானம் !
Wednesday, June 4th, 2025
தேசிய சுற்றுச்சூழல் வாரத்தை முன்னிட்டு வேலணை பிரதேச சபையின் பிரதேசத்தி ஆளுகைக்குட்பட்ட ஊர்காவற்றுறைக்கான பிரதான வீதியின் கரையோரப் பகுதி இன்று (04) சிரமதானம் மூலம் துப்பரவு செய்யப்பட்டது.
வேலணை பிரதேச சபையின் ஏற்பாட்டில் இந்த சிரமதானம் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது பிளாஸ்டிக் பொருட்கள், குப்பைகள் குறித்த பகுதியிலிருந்து அகற்றப்பட்டது.
வேலணை பிரலதேச சபையின் செயலாளர், உத்தியோகத்தர்கள், மற்றும் பிரதேச மக்களின் பங்களிப்புடன் குறித்த சிரமதான பணி முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
00
Related posts:
ஒரேநாளில் 1451 கொரோனா தொற்றாளர்கள் பதிவு !
வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள சட்டமூலம் பயங்கரவாதத்திற்கு எதிரானதே தவிர, ஜனநாயகத்திற்கு எதிரானதல்...
மின் கட்டண திருத்தம் தொடர்பான பரிந்துரைகளை முன்வைப்பதில் தாமதம் - மின் கட்டண திருத்தம் மேற்கொள்ளப்ப...
|
|
|


