யாழ். மாநகர சபையின் 23 ஆம் வட்டாரத்திற்கான அலுவலகம்  குருநகர் பகுதியில் திறந்துவைப்பு!

Friday, April 25th, 2025

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் யாழ். மாநகர சபையின் 23 ஆம் வட்டாரத்திற்கான அலுவலகம் நேற்றையதினம் (24) குருநகர் பகுதியில் திறந்து வைக்கப்பட்டது.

கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தாவினால் குறித்த அலுவலகம் நாடா வெட்டி வைக்கப்பட்டது.

நிகழ்வில், தொழிலதிபர் ஞானப்பிரகாசம் சுலக்சன், குறித்த வட்டாரத்தில் போட்டியிடும் டிலான் சுரஞ்சன், சக வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதனிடையே  நல்லூர் பிரதேச சபைக்கான 12 ஆம் வட்டார வேட்பாளர் அஶ்ரீ கணேஸ் ஏற்பாடு செய்யப்பட்ட பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்ட செயலாளர் நாயகம்  டக்ளஸ் தேவானந்தா, உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மற்றும் மற்றும் அரசியல் நிலைரங்கள் தொடர்பாக கலந்துரையாடினார்.

இக்கூட்டத்தில்,  11 ஆம் வட்டாரத்தில் போட்டியிடும் யோகராசா யோகசீலன்  மற்றும் அலெக்ஸ்சாண்டர் கிருஸ்ணவேணி 12 வட்டார வேட்பாளர் சுப்பிரமணியம் சுசீந்திரன் ஆகியோரும் பிரதேச மக்கள் என பலர் கலந்து கொண்டனர். –

அத்துடன் யாழ் மாநகர சபைக்கான தேர்தலில் 03ஆம் வட்டாரத்தில் போட்டியிடும் வட்டார வேட்பாளர் விமலேஸ்வரி அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கலந்து கொண்டார்.

000

Related posts:

வீணைச் சின்னத்திற்கு வாக்களித்து வளமான வாழ்வியலை உறுதிப்படுத்துங்கள் - சுதுமலையில் டக்ளஸ் தேவானந்தா!
ஜனாதிபதி ரணிலின் வெற்றி - தமிழ் மக்கள் விரைவில் கடந்த காலங்களிலிருந்து விடுபட்டு சிறப்பான எதிர்கால...
சமூக வலைத்தளங்களில் போலியான செய்திகள் - வங்கிக் கணக்குகள் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களை வழங்குவதைத் தவ...

இறக்குமதிக் கனவுகளில் மிதந்தால் நாட்டை எவராலும் காப்பாற்ற முடியாது போய்விடும் - நாடாளுமன்றில் செயலாள...
வேலணையில் நூறு நகரத் திட்டத்தின் தேசிய நிகழ்வு - அமைச்சர் டக்ளஸின் பரிந்துரையில் பிரதமர் மஹிந்த ஆரம்...
வட மாகாணத்திற்கு அனுப்பப்பட்ட தரமற்ற சீனி - அமைச்சர் டக்ளஸ் உடனடிநடவடிக்கை - கூட்டுறவு சங்கத்தினருக...