நல்லூரானுக்கு இனி மல் இல்லை – பருத்தித்துறை பிரதேச சபையில் மணல் அகழ்வு விவகாரத்தால் கடும் வாதப் பிரதிவாதம்!

Tuesday, July 29th, 2025

பருத்தித்துறை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்று காலை 9:00 மணியளவில் தவிசாளர் உதயகுமார் யுகதீஸ் தலமையில் ஆரம்பமானது.

இதில் நல்லூர் முருகன் ஆலயத்திற்கு மணல் பரப்புவதற்கு மணல் ஏற்றுவதற்கு வீதியை பயன்படுத்த தவிசாளரால் தன்னிச்சையாக அனுமதி வழங்கப்பட்ட விவகாரம் தொடர்பாக சபையில் வாத பிரதிவாதங்கள் நீண்டநேரம் இடம் பெற்றது.

அதனை தொடர்ந்து  இனிவரும் காலங்களில் நல்லூர் முருகன் ஆலயத்திற்கு வழங்கப்பட் மணல்மண்ணை மீள பாவிக்க கோருவதுடன் இனிவரும் காலங்களில் வடமராட்சி கிழக்கிலிருந்து மணல்மண் வழங்குவதில்லை என்ற தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

இன்றைய அமர்வில் பருத்தித்துறை பிரதேச சபை அமர்வில் உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொண்டிருந்தனர்

Related posts: