அமரர் நிரோஷாவின்பூதவுடலுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அஞ்சலி மரியாதை!

Thursday, May 29th, 2025


ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின்  வலி தெற்கு பிரதேச செயற்பாட்டாளர் தோழர் மதஷன் அவர்களது சகோதரி  அமரர் துசியந்தன் நிரோஷா அவர்களது பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா  இறுதி அஞ்சலி மரியாதையை செலுத்தினார்.

அமரர் நிரோஷா கல்லீரல் நோய் காரணமாக சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.

இன்நிலையில் யாழ்ப்பாணம் மூத்தவிநாயகர் வீதியில் உள்ள அன்னாரது இல்லத்தில் இறுதிக் கிரியைகள் இன்று நடைபெற்ற நிலையில்  அமரரது இல்லத்திற்கு சென்றிருந்த செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா பூதவுடலுக்கு தனது இறுதி அஞ்சலியை  செலுத்தியதுடன் குடும்பத்தினருக்கு தனது ஆறுதலையும் அனுதாபத்தையும் தெரிவித்தார்.

இதன்போது கட்சியின் தோழர்களும் கலந்துகொண்டு தமது இறுதி மரியாதையைச் செலுத்தியிருந்தனர்.

Related posts: