வியாபார நிலையங்களின் உரிமையாளர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளுடன் அனுமதி – வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களம்!

Saturday, May 9th, 2020

கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான கட்டுப்பாடுகளுடன் எதிர்வரும் 11 ஆம் திகதி இயல்பு நிலைக்கு நாடு மீளத் திரும்புவதற்கு தயாராகியுள்ள நிலையில்  வியாபார நிலையங்களின் உரிமையாளர்கள் கடைப்பிடிக்க வேண்டியவை தொடர்பில் வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களம் ஆலோசனைகளை வழங்கியுள்ளது.

அத்துடன் கோரோனா நோயிலிருந்து எம்மையும் எமது சமூகத்தையும் பாதுகாப்பதற்கு பின்வரும் நடைமுறைகளைக் கட்டாயமாகக் கடைப்பிடிக்குமாறு கேட்டுக் கேட்டுள்ளது.

இதனடிப்படையில் –

வியாபார நிலையங்களின் முன்பாக கைகழுவும் வசதிகளை ஏற்படுத்துதல்,

வியாபார நிலைய ஊழியர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிவதுடன் வருகைதரும் வாடிக்கையாளர்களையும் முகக்கவசம் அணிவதனை உறுதிப்படுத்தல்,

ஊழியர்கள் 2 மணித்தியாலங்களுக்கு ஒரு முறை சவர்க்காரமிட்டு ஓடும் நீரில் 20 செக்கன்கள் வரை கைகழுவுதல் ,

விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள பொருள்களை வாடிக்கையாளர்கள் தேவையற்ற முறையில் தொடுவதனைத் தவிர்தல்,

வியாபார நிலையத்தில் காற்றோட்டம் சீராக இருப்பதை உறுதிப்படுத்தல்,

உள்ளிட்ட நடைமுறைகளை பின்பற்றி சுகாதார நிலமைகளை மேம்படுத்தி கொரோனா தொற்றிலிருந்து தங்களையும் தமது சமூகத்தையும் பாதுகாக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம் என வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களம் மேலும் கேட்டுள்ளது.

Related posts: