புகையிரத சாரதிகள் நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில்!
Tuesday, March 5th, 2019புகையிரத சாரதிகள் இன்று(05) நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பினை மேற்கொள்ளவுள்ளதாக ரயில்வே சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக தொடம்கொட தெரிவித்துள்ளார்.
45 வயதை அண்மித்த 12 சாரதிகளை சேவைக்கு இணைத்துக் கொண்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே குறித்த பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் தமது கோரிக்கைகள் மற்றும் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக் கொடுக்கப்பட்டால் பணிப்புறக்கணிப்பினை கைவிடுவதுதொடர்பில் ஆராயப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
கடந்த வருடம் 107 துப்பாக்கி சூட்டுச் சம்பவங்கள் - 502 பேர் பலி!
நாடாளுமன்ற உறுப்பினர்களான டக்ளஸ் தேவானந்தா அவர்களும் சுமந்திரன் அவர்களும் கலந்து கொள்ளும் பகிரங்க வி...
கடும் வரட்சி: பாதிக்கப்பட்ட 1,35,000 குடும்பங்களுக்கு இம்மாதம் நிவாரணம்!
|
|