இலத்திரனியல் கொடுப்பனவுகளுக்கு புதிய வரி நடைமுறை!
Thursday, August 15th, 2019
கடனட்டை மற்றும் இலத்திரனியல் பணப்பறிமாற்ற அட்டைகளை பயன்படுத்தி பொருட்களை கொள்வனவு செய்யும் போது அதற்கு வரி அறிவிடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இலங்கைக்கு வெளியே மேற்கொள்ளப்படுகின்ற இவ்வாறான கொடுப்பனவுகளுக்கே இந்த வரி அறிவிடப்படவுள்ளது.
அதற்கமைய கொடுப்பனவு செய்யும் தொகையில் 3.5 சதவீதம் வரியாக அறவிடுவதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
இதனையடுத்து, 2018ஆம் ஆண்டு 35 ஆம் இலக்க நிதிச்சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Related posts:
பொலிஸாருக்கு பதிலாக விசேட அதிரடிப்படையினர்!
குற்றச்சாட்டுக்கு தேர்தல் ஆணையாளர் பதில்!
அரியாலை இளைஞர் படுகொலை: சிறப்பு அதிரடிப்படையினரின் விளக்கமறியல் நீடிப்பு!
|
|
|


