வாள்வெட்டுக் குழுவை அடக்கத் தனிக் குழு!
Saturday, October 28th, 2017
வாள்வெட்டுக் குழுக்களைக் கைது செய்து கட்டுப்படுத்தும் நோக்கில் பொலிஸ் தனிக்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. அது நேற்றுமுன்தினம் தொடக்கம் செயற்பட ஆரம்பித்துள்ளதாகவும் வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் றொசான் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.
வடக்கில் தற்போது இடம்பெறும் குற்றச் செயல்கள் தொடர்பில் அவரிடம் கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 10 க்கும் மேற்பட்ட பொலிஸாரைக் கொண்டு இந்தப் புதிய குழு உருவாக்கப்பட்டுள்ளது. குடாநாட்டில் வாள்வெட்டு, முகமூடிக் கொள்ளை, அடாவடிகளில் ஈடுபடுவோரை இந்தக் குழு தேடித் தேடிக் கைது செய்யும் என்று அவர் மேலும் தெரிவித்தார். அண்மைக்காலமாக யாழ்.குடாநாட்டில் மேற் குறித்த குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
சிறுவர்களிடையே பரவும் 3 நோய்கள் குறித்து பொதுமக்களுக்கு வைத்தியர்கள் அவசர எச்சரிக்கை!
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 80,000 ஐத் தாண்டியுள்ளது - தொற்றுநோயியல் பிரிவு எச்சரிக்கை!
யாழ்ப்பாணம் பொது நூலகம் தீயூட்டி எரிக்கப்பட்டு இன்றுடன் 44 ஆண்டுகள் நிறைவு!
|
|
|


