பொலிஸாரினால் கொழும்பு செல்பவர்களுக்கு எச்சரிக்கை!

Monday, April 2nd, 2018

பொலிஸ் தலைமையகத்தினால் புதுவருடத்தை முன்னிட்டு கொழும்பு செல்பவர்களுக்குப் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புறக்கோட்டை, மகரகம, நுகேகொட உட்பட்ட மற்றும் அதற்கு அருகில் உள்ள நகரங்களில் பொருள்கள் கொள்வனவு செய்ய வருவோர், திருடர்களிடம்அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புதுவருட காலப்பகுதியில் திருடர்கள் மற்றும் கொள்ளைக்காரர்கள் நகரத்திற்கு அருகில் அதிகமாக சுற்றித்திரிகின்றனர். இதனால் மக்களை அவதானமாகஇருக்க வேண்டும் என்று பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

அதேபோன்று தங்கள் வாகனங்களை நிறுத்திய பின்னர் அது தொடர்பிலும் அவதானமாக இருக்க வேண்டும் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts: