பிரத்தியேக நிலையம் 24 மணித்தியாலங்களும் இயங்கும்!

Thursday, March 8th, 2018

தற்போதைய அசாதாரண சூழ்நிலையில் 24 மணித்தியாலமும் மக்களுக்கு உதவியளிக்கக்கூடிய பிரத்தியேக மத்திய நிலையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம்அறிவித்துள்ளது.

நிலைமையைக் கட்டுப்படுத்த அரசாங்கம் சகல நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது. ஆனால் சில நபர்கள் இனவாத, மதவாத கருத்துக்களைப் பரப்பி உணர்வுத் தூண்டும் நாசகார நடவடிக்கைகளில்ஈடுபட்டு வருகிறார்கள். இதனை துரிதமாக தடுப்பதற்கு உரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதன் பிரகாரம் பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரியினது அலுவலகத்தின் பொறுப்பில் 24 மணித்தியாலங்களும் துரித சேவை வழங்கும் நிலையம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இதனைதொலைபேசி ஊடாக தொடர்பு கொள்ள அழைக்க வேண்டிய இலக்கம் 0711 261 261 என்பதாகும்.

Related posts: