பாதுகாப்பு அதிசொகுசு வாகனங்கள் ஆழ்கடலில் மூழ்கடிக்கும் நிகழ்வு !

Monday, March 26th, 2018

இலங்கையில் யுத்த காலத்தில் ஜனாதிபதியின் பாதுகாப்பினைக் கருத்தில் கொண்டு, இறக்குமதி செய்யப்பட்ட குண்டு துளைக்காத அதிசொகுசு வாகனங்களை ஆழ்கடலில் மூழ்கடிக்கும் நிகழ்வு இன்று(26) இடம்பெறவுள்ளது.

குறித்த வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள தொலைத் தொடர்பு சாதனங்கள் மற்றும் பெறுமதியான உபகரணங்கள் வேறாக கழற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு குறித்த வாகனங்களை கடலில் மூழ்கடிக்க காரணம், பழைமை வாய்ந்த மோட்டார் வாகனங்களை மீண்டும் திருத்த அதிக செலவு செலவாகின்றமை என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts:


கொரோனா பரிசோதனை தொடர்பான வேலைத்திட்டத்தை நாட்டுக்கு முன்வைக்க வேண்டும் - அரச மருத்துவ அதிகாரிகள் சங்...
இலங்கையின் மொத்த சனத்தொகையில் 50 வீதத்திற்கும் அதிகமானோருக்கு முழுமையாக தடுப்பூ வழங்கப்பட்டுள்ளது - ...
பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாக முறைப்பாடு - திடீர் சோதனைகளுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா...