தேர்தலை எதிர்கொள்ள தயார் -பிரதமர்!
Tuesday, May 2nd, 2017
தமது கட்சி எந்த நேரத்திலும் தேர்தலை எதிர்நோக்க தயாராக உள்ளது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
பொரளை கெம்பல் பார்க் மைதானத்தில் இடம்பெற்று வரும் ஐக்கிய தேசியக் கட்சியின்மே தினக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் ரணில்விக்ரமசிங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
ஐ.தே.கவின் மே தினக் கூட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் தொகையைபார்க்கும் போதே இந்த நம்பிக்கை பிறந்துள்ளது என பிரதமர் தெரிவித்துள்ளார். தமது அரசாங்கத்தின், அபிவிருத்தி திட்டங்களுக்கு ஐ.தே.கவின் ஆதரவாளர்களும் உதவவேண்டும் என பிரதமர் இதன் போது கோரிக்கை விடுத்தள்ளார்.
Related posts:
பொதுமக்களின் நன்மைக்காக நான் வாய்மூலம் பிறப்பிக்கும் உத்தரவுகளை சுற்றுநிரூபங்களாக கருதுங்கள் - ஜனாத...
நிலாவெளி, பெரியகுளம் பகுதியில் விகாரை நிர்மாணப் பணிக்கு அனுமதி மறுப்பு - பிக்குகள் ஆர்பாட்டம்!
பழமையான பொருளாதாரப் போக்கும் அரசியல் போக்கையும் மாற்றியமைக்க வேண்டும் - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க...
|
|
|


