தானியங்கி புகையிரதக் கடவைகளை அமைத்து உயிரிழப்புக்களை நிறுத்துங்க!

கிளிநொச்சி அறிவியல் நகர் தொடக்கம் பச்சிலைப்பள்ளி முகமாலை வரைக்குமான பகுதிகளில் ஏ-9 வீதியில் இருந்து புகையிரத வீதியைக் குறுக்கறுத்துச் செல்லும் 38 இற்கும் மேற்பட்ட வீதிகள் காணப்படுகின்றன.
இவ்வாறு காணப்படும் வீதிகளில் 13 வரையான வீதிகளே பாதுகாப்பு கடவைகள் அமைந்த வீதிகளாகக் காணப்படுகின்றன. ஏனைய வீதிகள் பாதுகாப்பற்ற மிகவும் ஆபத்தான வீதிகளாகவே காணப்படுகின்றன.
குறித்த வீதிகள் இவ்வாறு காணப்படுவதனால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதுடன் உயிரிழப்புக்கள் கூட இடம்பெறுகின்றன.
எனவே குறித்த வீதிகளுக்கு தானியங்கி புகையிரதக் கடவைகளை அமைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related posts:
மதுசாரம், புகையிலை மற்றும் ஏனைய போதைப்பொருள் தடுப்பு தொடர்பில் யாழ்ப்பாணத்தில் ஆராய்வு!
திருக்கேதீஸ்வர நுழைவாயிலில் கிறிஸ்தவ சொரூபம் - சைவ மகா சபை கடும் கண்டனம்!
பாடசாலைகளில் புத்தகப் பைகளை பரிசோதிக்கும் நடைமுறை மீண்டும் ஆரம்பம் - சுற்றறிக்கை வெளியிடப்படும் என க...
|
|