ஜப்பான் வேலைவாய்ப்பு வதந்தி – பிரதமர் அலுவலகம்!
Friday, September 29th, 2017
தமது அலுவலகம் மூலம் ஜப்பானில் வேலைவாய்ப்பை பெற்றுக்கொடுக்கும் எந்த வேலைத்திட்டங்களும் மேற்கொள்ளப்படவில்லை என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
அறிக்கையொன்றை வௌியிட்டு பிரதமர் அலுவலகம் இதனை தெரிவித்துள்ளது.தமது அலுவலகம் ஊடாக ஜப்பானில் தொழில் பெற்றுத்தருவதாக கூறி பல்வேறு நபர்கள் மற்றும் நிறுவனங்கள் நிதி மோசடியில் ஈடுபடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.இவ்வாறு மோசடியில் ஈடுபடும் நபர்கள் அல்லது நிறுவனங்கள் தொடர்பில் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு அறிவிக்குமாறு பிரதமர் அலுவலகம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
Related posts:
நீதிமன்ற அவமதிப்பு விவகாரம்: நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு 4 வருட கடூழிய சிறைத்தண்டனை...
வழித்தட அனுமதியின்றி பயணித்த 25 பேருந்துகள் பறிமுதல் - தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தகவல்!
அபுதாபி - கட்டுநாயக்கவுக்கு இடையிலான நேரடி விமான சேவை விரைவில் - அபுதாபியின் ஏர் அரேபியா விமான சேவை ...
|
|
|


