சைட்டம் ஆர்ப்பாட்டத்திற்கு இடைக்காலத் தடை!

Thursday, January 25th, 2018

சர்ச்சகக்கரிய சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிராக முன்னெடுக்கப்படவுள்ள ஆர்ப்பாட்டப் பேரணிக்கு எதிராக கொழும்பு கோட்டை மற்றும் கங்கொடவில நீதவான்நீதிமன்றங்களினால் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த தடையுத்தரவு பொலிஸாரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு அமைய பிறப்பிக்கப்பட்டுள்ளது. அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த பேரணி கொழும்புக்குள் நுழைவதைத் தடுக்கும் வகையிலேயே இந்த தடையுத்தரவைபொலிஸார் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: