சிறுவர்களை அரசியல் நடவடிக்கைகளில் பயன்படுத்தத்தடை!

Friday, February 2nd, 2018

சிறுவர்களை அரசியல் நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்துவதை தடுக்க வேண்டுமென சகல அரசியல் கட்சிகளிடமும் சுயாதீன குழுக்களிடமும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு சிறுவர்களை அரசியல் நடவடிக்கைகளில் பயன்படுத்துவது தொடர்பில் தகவல்கள் கிடைத்துள்ளதாக அதன் தலைவர் மரினி திலிவேரா தெரிவித்துள்ளார்.

அரசியல் நடவடிக்கைகளில் சிறுவர்கள் ஈடுபடுத்துவதன் மூலம் உடல் ரீதியாக அல்லது மன ரீதியாக பாதிக்கப்பட்டால் அது சிறுவர் துஷ்பிரயோகம் என அவர்சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுமாயின் அது தொடர்பாக, 1929 என்ற தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் இலக்கத்திற்கு தகவல் வழங்குமாறு மக்களிடம் தேசியசிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related posts: