குப்பைகளை அகற்றாவிடின் அதிகாரிகளை பதவி நீக்க நடவடிக்கை!

Thursday, July 6th, 2017

கொழும்பு மாந­க­ர­ச­பைக்கு உட்­பட்ட பகு­தி­களில் குவிந்­துள்ள குப்­பைகள் அனைத்தும் மூன்று தினங்­க­ளுக்குள் முழு­மை­யாக அகற்­றப்­பட வேண்டும் என அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க மாந­கர மற்றும் நகர சபை அதி­கா­ரி­க­ளுக்கு பணிப்­புரை விடுத்துள்ளார்.

இதனை அதி­கா­ரிகள் நடை­மு­றைப்­ப­டுத்த தவறும் பட்­சத்தில் பாரா­ளு­மன்றஅனு­மதி பெற்ற பொது­மக்கள் பாது­காப்பு சட்­டத்தின் பிர­காரம் உட­ன­டி­யாகஅமு­லுக்கு வரும் வகையில் அவ்­வ­தி­கா­ரிகள் பதவி நீக்­கப்­ப­டுவர் எனவும் அமைச்சர் எச்சரிக்கை விடுத்தார். கொழும்பு நக­ரத்தில் எழுந்­துள்ள குப்பை பிரச்­சி­னைக்கு உட­னடி தீர்வினை முன்­வைக்கும் நோக்கில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை மேல்­மா­கா­ணத்­திற்கு பொறுப்பான மாந­க ர­சபை மற்றும் நகரசபை அதி­கா­ரி­க­ளுடன் விசேட சந்­திப்­பொன்று கொழும்பு மாநக­ர­சபை கட்­டி­டத்­தொ­கு­தியில் இடம்­பெற்­றது. இச்­சந்­திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு கருத்து தெரி­வித்தார்

Related posts: